ஊர்ப்புதிர் - 34 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 34 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. எரியூர்
2. கல்குப்பம்
3. விளாங்குறிச்சி
4. பெண்ணாடம்
5. இளையநல்லூர்
6. அம்மகளத்தூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். ராமராவ்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 33 க்கு விடை: " காஞ்சிபுரம் "
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1. " காஞ்சிபுரம் ", தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான ஒரு நகராட்சி.
2. இந்நகரம் பாலாற்றின் (வேகவதி ஆற்றின்)கரையில் அமைந்துள்ளது.
3. காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாகப் பட்டுப் புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
4. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது. அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் இங்கு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், புற்றுநோய் மருத்துவமனை இவை அமைக்கப்பட்டன..
5. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை.
5. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை.
6. ஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் கோயில், திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வண்ண பெருமாள் கோயில், வைகுண்டநாத பெருமாள் கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் கோயில், பாண்டவதூதர் பெருமாள் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.
7. அருணகிரிநாதர் தமது திருப்புகழ் பாடல்களில் காஞ்சியின் குமரக்கோட்டத்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியர் குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர். கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரியகுளம்
பதிலளிநீக்குபெரியகுளம்
பதிலளிநீக்குபெரிய குளம்
பதிலளிநீக்கு4.1.5.3.6.2 : பெண்ணாடம், எரியூர், இளையநல்லூர், விளாங்குறிச்சி, அம்மகளத்தூர், கல்குப்பம்.
பதிலளிநீக்குவிடை : பெரியகுளம்
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 9.3.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குPeriyakulam
திரு சுரேஷ் பாபு 9.3.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. எரியூர் 2
2. கல்குப்பம் 6
3. விளாங்குறிச்சி 4
4. பெண்ணாடம் 1
5. இளையநல்லூர் 3
6. அம்மகளத்தூர் 5
விடை: பெரியகுளம்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 10.3.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குபெரியகுளம்
திரு சந்தானம் குன்னத்தூர் 10.3.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குThe answer is PERIYAKULAM
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 10.3.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"பெரியகுளம்"
திருமதி சாந்தி நாராயணன் 10.3.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குபெண்ணாடம்
எரியூர்
இளையநல்லூர்
விளாங்குறிச்சி
அம்மகளத்தூர்
கல்குப்பம்
இறுதி விடை : பெரியகுளம்