ஊர்ப்புதிர் - 65 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 65 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. ஜெயங்கொண்டம்
2. தஞ்சாவூர்
2. தஞ்சாவூர்
3. பெண்ணாடம்
4. கொட்டாம்பட்டி
5. நாமக்கல்
6. ஆரணி
7. குளத்துப்பாளையம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்