ஊர்ப்புதிர் - 28 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்
[ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 28 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. பெரியமணலி
2. அத்தியூர்
3. எதிர்கோட்டை
4. ராமேஸ்வரம்
5. காரைக்குடி
6. ஆரணி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 27 க்கு விடை: " பென்னாகரம் "
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1. " பென்னாகரம் ", தமிழ்நாடு தருமபுரி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .
2. ஒகனேக்கல் அருவி பென்னாகரத்திளிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ்