டிசம்பர் 28, 2015

ஊர்ப்புதிர் - 24

ஊர்ப்புதிர் - 24 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 24 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     திருப்பரங்குன்றம்                      
2.     கல்லக்குடி                           
3.     கோபிசெட்டிப்பாளையம்                       
4.     சாயல்குடி                       
5.     தேவிபட்டணம்                    
6.      ஜோலார்பேட்டை                  
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 23 க்கு விடை:   "  பரமக்குடி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.      " பரமக்குடி ",  தமிழ்நாடு  ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.      
2.      இது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.  
3.  பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். மொத்த தமிழகத்திற்கான மிளகாய் விலை இங்குதான் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  
4.    பரமக்குடியில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 
5.  இங்கு அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில், முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில், ஐந்து முனை முருகன் கோவில் பிரசித்தி பெற்றவை. சௌராஷ்டிரர்களால் கொண்டாடப்படும் காமன் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.       
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 21, 2015

ஊர்ப்புதிர் - 23


ஊர்ப்புதிர் - 23 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 23 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     வாடிப்பட்டி                     
2.     கும்பக்கரை                           
3.     பேரளம்                      
4.     வெல்லங்குளி                      
5.     பர்கூர்                   
6.      வடமதுரை                  
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 22 க்கு விடை:   "  வேளாங்கண்ணி  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.    " வேளாங்கண்ணி  ",  தமிழ்நாடு  நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பேரூராட்சி .     
2.    நாகப்பட்டினத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் வேளாங்கண்ணி அமைந்துள்ளது. 
3.    காவிரி நதியின் ஒரு கிளை நதியான வெள்ளையாறு இந்நகரின் தென்புறமாக ஓடி கடலில் கலக்கிறது. 
4.    கத்தோலிக்க கிருத்தவர்களின் மிகப்பெரிய புனிதத் தலங்களில் ஒன்றாக வேளாங்கண்ணி கருதப்படுகிறது. 
5.  இங்கு அமைந்துள்ள மாதா கோவில் இரட்டை கோபுரங்கள் கொண்டது. தூய ஆரோக்கிய அன்னை பெயரில் கட்டப்பட்டதால், இது தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது.. 
6.  எல்லா சமயத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து அன்னை மரியாவுக்கு பிரார்த்தனைகள் செலுத்துகிறார்கள்.   நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்பவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதால் நன்றிக் காணிக்கைகளையும் அளிக்கிறார்கள்.     
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 14, 2015

ஊர்ப்புதிர் - 22

ஊர்ப்புதிர் - 22 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  
ஊர்ப்புதிர் - 22  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     ஜெயங்கொண்டம்                    
2.     கருங்குழி                          
3.     வேலூர்                     
4.     செக்கானூரணி                     
5.     விளாத்திகுளம்                  
6.      திருக்கழுக்குன்றம்                 
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது ஒரு புண்ணியத்தலம். 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 21 க்கு விடை:   "  மதுரவாயல்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.       " மதுரவாயல் ",  தற்போது தமிழ்நாடு  சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி..     
2.        மதுரவாயல் 2009 க்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாய் இருந்தது.
3.    மதுரவாயல்  சென்னைத் துறைமுகத்திலிருந்து 8 வது  மைலில் இருப்பதால் மதுரவாயில்  "எட்டாவது மைல் " என்ற பெயரையும் கொண்டுள்ளது.
4.     மதுரவாயல் என்றால் அழகான வாயல் என்று பொருள். சென்னை மாநகரின் நுழைவாயல் என்பதால் இந்த பெயர் வந்ததாக கூறுவார்.
5.        மதுரவாயல் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 
6.      எண்ணூர் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டு சில அரசியல் காரணங்களால் தடைபட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது    
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 07, 2015

ஊர்ப்புதிர் - 21

ஊர்ப்புதிர் - 21 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  
ஊர்ப்புதிர் - 21  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     ராஜபாளையம்                   
2.     அகரம்                         
3.     சோளிங்க நல்லூர்                    
4.     முதுகுளத்தூர்                    
5.     மல்லியம்                 
6.      ஆரல்வாய்மொழி                
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது தமிழ் நாட்டில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒரு பகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 20 க்கு விடை:   "  ஒரத்தநாடு  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.       "ஓரத்தநாடு ",  தமிழ்நாடு  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு பேரூராட்சி .     
2.        இந்த ஊர் முத்தம்பாள்புரம் என்றும் முத்தம்பால்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.        
3.       ஒரத்தநாடு என்னும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகிப் பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது.  
4.     இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில் நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது 100 ஆண்டுகளுக்கு முந்தைய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும். காசிக்கு சென்று காசி விஸ்வநாதரையும் காசி விசாலாட்சி அம்மனையும் தரிசிக்க முடியாதவர்கள் இந்த கோயிலில் இரு தெய்வங்களையும் தரிசிக்கலாம்.  
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 01, 2015

ஊர்ப்புதிர் - 20

ஊர்ப்புதிர் - 20 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 20  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     காரமடை                  
2.     கொல்லங்கோடு                        
3.     திருவாதவூர்                   
4.     ஒட்டப்பிடாரம்                   
5.     பார்த்திபனூர்                
6.      சண்முகநாதபுரம்                
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது தமிழ் நாட்டில் ஒரு சட்ட மன்றத் தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 19 க்கு விடை:   "  அறந்தாங்கி  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :


1.       "அறந்தாங்கி  ",  தமிழ்நாடு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  ஒரு நகராட்சி.     
2.      புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதான நதியான வெள்ளாறு இந்த நகரின் மேற்குப் பகுதியை கடந்து சென்று வங்கக்கடலை அடைகிறது.       
3.       பிரம்மாண்ட கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் இந்த ஊரின் தொன்மையை பறைசாற்றுவதை காணலாம். இந்த கோட்டையின் சுவர்கள் செங்கற்களாலோ அல்லது பாறைகளாலோ கட்டப்பட்டதல்ல. அதன் பெரிய இடைவெளிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளதை காணலாம். கோட்டையை சுற்றி பிரம்மாண்டஅகழி உள்ளது. 
4.     பழமைவாய்ந்த சிவன் கோவில் ஒன்று இங்குள்ளது. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

அக்டோபர் 25, 2015

ஊர்ப்புதிர் - 19

ஊர்ப்புதிர் - 19 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 19  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     உறங்கான்பட்டி                 
2.     ஊர்மேலழகியான்                       
3.     கயத்தாறு                  
4.     அந்தியூர்                  
5.     உளுந்தூர்பேட்டை               
6.       திருத்தங்கல்               
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது தமிழ் நாட்டில் ஒரு சட்ட மன்றத் தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 18 க்கு விடை:   "  மார்த்தாண்டம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :


1.       "மார்த்தாண்டம் ",  தமிழ்நாடு  கன்னியாகுமாரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒரு வணிகத் தலமாகும்.    
2.     இந்த ஊர் "தொடுவட்டி" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூரை உருவாக்கிய மார்த்தாண்ட வர்மா நினைவாக இந்நகருக்கு இந்தப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.      
3.       மார்த்தாண்டம் தேன் புகழ்பெற்று விளங்குகிறது.  தேனீ வளர்ப்பு, தேன் தயாரிப்பு இங்கு முக்கிய தொழிலாகும். மார்த்தாண்டம் எங்கும் பச்சைப் பசேல் என்றிருக்கும்.
4.     இங்குள்ள பேருந்து நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய மற்றும் பெரிய பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்து சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர், மதுரை, வேளாங்கண்ணி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கும், பெங்களூர், புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  
5.   இவ்வூருக்கு அருகில் காணத்தக்க இடங்கள்:  பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பேச்சிப்பாறை நீர்த்தேக்கம், தெங்கபட்டணம் கடற்கரை, சித்தாரல் ஜெயின் கோயில் ஆகியவை. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

அக்டோபர் 17, 2015

ஊர்ப்புதிர் - 18

ஊர்ப்புதிர் - 18 ல்தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 18  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     புதுக்கோட்டகம்                
2.     வேடந்தாங்கல்                      
3.     சீர்காழி                  
4.     திருப்புவனம்                 
5.     கிணத்துக்கடவு              
6.       மானாமதுரை   
7.       வேளாங்கண்ணி               
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 17 க்கு விடை:   "  எட்டயபுரம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.   "எட்டயபுரம் ",  தமிழ்நாடு  தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி.   
2.  எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே  குறிப்பிடுகின்றனர்.     
3.     மகாகவி பாரதியார் இங்கு பிறந்தவர். மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார். 
4.     இவ்வூர் மக்களின் முக்கிய தொழில்கள்:  நெசவுத் தொழில், தீப்பெட்டி தொழில், வேளாண்மை. 
5.   இவ்வூரில் காணத்தக்க இடங்கள்:   பாரதியார் மணி மண்டபம், பாரதியார் பிறந்த வீடு, முத்துசாமி தீட்சிதர் நினைவகம், உமறுப் புலவர் தர்கா, எட்டப்பன் அரண்மனை, மாவீரன் அழகு முத்துக்கோன் அரண்மனை 
6.   அருகாமையிலுள்ள பார்க்கக்கூடிய இடங்கள்:   வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன் நினைவிடம் - கயத்தாறு, எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம், அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் - எப்போதும் வென்றான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ்