நவம்பர் 14, 2015

ஊர்ப்புதிர் - 22

ஊர்ப்புதிர் - 22 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  
ஊர்ப்புதிர் - 22  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     ஜெயங்கொண்டம்                    
2.     கருங்குழி                          
3.     வேலூர்                     
4.     செக்கானூரணி                     
5.     விளாத்திகுளம்                  
6.      திருக்கழுக்குன்றம்                 
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது ஒரு புண்ணியத்தலம். 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 21 க்கு விடை:   "  மதுரவாயல்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.       " மதுரவாயல் ",  தற்போது தமிழ்நாடு  சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி..     
2.        மதுரவாயல் 2009 க்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாய் இருந்தது.
3.    மதுரவாயல்  சென்னைத் துறைமுகத்திலிருந்து 8 வது  மைலில் இருப்பதால் மதுரவாயில்  "எட்டாவது மைல் " என்ற பெயரையும் கொண்டுள்ளது.
4.     மதுரவாயல் என்றால் அழகான வாயல் என்று பொருள். சென்னை மாநகரின் நுழைவாயல் என்பதால் இந்த பெயர் வந்ததாக கூறுவார்.
5.        மதுரவாயல் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 
6.      எண்ணூர் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டு சில அரசியல் காரணங்களால் தடைபட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது    
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

9 கருத்துகள் :

  1. வேளாங்கண்ணி

    - tuffyshri@yahoo.com

    பதிலளிநீக்கு
  2. வேளாங்கண்ணி - முத்துசுப்ரமண்யம்

    பதிலளிநீக்கு
  3. 1. வேலூர்
    2. விளாத்திகுளம்
    3. கருங்குழி
    4. திருக்கழுக்குன்றம்
    5. ஜெயங்கொண்டம்
    6. செக்கானூரணி

    வேளாங்கண்ணி. Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    பதிலளிநீக்கு
  4. திருமதி சாந்தி நாராயணன் 14.11.2015 அன்று அனுப்பிய விடை:

    வேலூர்
    விளாத்திகுளம்
    கருங்குழி
    திருக்கழுங்குன்றம்
    ஜெயங்கொண்டான்
    செக்கானூரணி

    இறுதிவிடை: வேளாங்கண்ணி

    பதிலளிநீக்கு
  5. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 14.11.2015 அன்று அனுப்பிய விடை:

    வேளாங்கண்ணி

    பதிலளிநீக்கு
  6. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 14.11.2015 அன்று அனுப்பிய விடை:

    வேளாங்கண்ணி

    பதிலளிநீக்கு
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 14.11.2015 அன்று அனுப்பிய விடை:

    வேளாங்கண்ணி

    பதிலளிநீக்கு