மார்ச் 16, 2016

ஊர்ப்புதிர் - 35

ஊர்ப்புதிர் - 35 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 35  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     போடம்பட்டி
2.     சூலக்கரை                                        
3.     ஒத்தக்கடை                                
4.     மதுரை                                 
5.     நாகர்கோவில்                                
6.      புவனகிரி     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.  
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 33 க்கு விடை:   " பெரியகுளம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " பெரியகுளம் ",  தமிழ்நாடு  தேனி  மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.       
2.       கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் மிகவும் செழிப்பான பிரதேசங்களில் ஒன்று.  விவசாயம் இங்கு முக்கிய தொழில்.
3.    வராக நதி, இந்நகரை வடகரை, தென்கரை என்று இரண்டு பிரிவாக பிரிக்கிறது. இந்நதியில் எப்போதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதால் வற்றாத நதி என்று அழைக்கப்பட்டு பின் வராக நதி என்று பெயர் மாறியதாக சொல்லப்படுகிறது.     
4.  இங்கு மாம்பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்நகரம் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படுகிறது. இலக்கியத்தில் இந்நகரம் குளந்தை நகரம் என்றும் அழைக்கப்பட்டது. 
5.      இந்நகரத்தில் கி.பி.10ம்  நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அருள்மிகு பால சுப்ர மணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அருள்மிகு கௌமாரியாம்மன் கோயில், வீச்சுகருப்பையா கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காளஸ்திரி  கோயில், பகவதி அம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் இவையும் இங்கு அமைந்துள்ளன.   
6.   பெரியகுளத்துக்கு அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்: கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சோத்துப்பாறை ஆணை, தீர்த்தத் தொட்டி, வைகை அணை ஆகியவை.  
7.       இவ்வூர் பிரபலங்கள்:   முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கவிஞர் வைரமுத்து, தமிழ் திரைப்பட இயக்குனர் பாலா, தமிழ் திரைப்பட நடிகர்கள் சுந்தர்ராஜன், சுருளிராஜன் ஆகியோர். 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

9 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 16.3.2016 அன்று அனுப்பிய விடை:

    Pudhukottai

    பதிலளிநீக்கு
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 16.3.2016 அன்று அனுப்பிய விடை:

    புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு
  3. திரு சந்தானம் குன்னத்தூர் 16.3.2016 அன்று அனுப்பிய விடை:

    Answer is PUTHUKKOTTAI.

    பதிலளிநீக்கு
  4. திருமதி சாந்தி நாராயணன் 16.3.2016 அன்று அனுப்பிய விடை:

    புவனகிரி
    மதுரை
    சூலக்கரை
    நாகர்கோவில்
    போடம்பட்டி
    ஒத்தக்கடை

    இறுதிவிடை:புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு
  5. திருமதி சாந்தி நாராயணன் 16.3.2016 அன்று அனுப்பிய விடை:

    புவனகிரி
    மதுரை
    சூலக்கரை
    நாகர்கோவில்
    போடம்பட்டி
    ஒத்தக்கடை

    இறுதிவிடை:புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு