ஊர்ப்புதிர் - 22 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 22 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. ஜெயங்கொண்டம்
2. கருங்குழி
3. வேலூர்
4. செக்கானூரணி
5. விளாத்திகுளம்
6. திருக்கழுக்குன்றம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 21 க்கு விடை: " மதுரவாயல் "
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1. " மதுரவாயல் ", தற்போது தமிழ்நாடு சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி..
2. மதுரவாயல் 2009 க்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாய் இருந்தது.
3. மதுரவாயல் சென்னைத் துறைமுகத்திலிருந்து 8 வது மைலில் இருப்பதால் மதுரவாயில் "எட்டாவது மைல் " என்ற பெயரையும் கொண்டுள்ளது.
4. மதுரவாயல் என்றால் அழகான வாயல் என்று பொருள். சென்னை மாநகரின் நுழைவாயல் என்பதால் இந்த பெயர் வந்ததாக கூறுவார்.
5. மதுரவாயல் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
6. எண்ணூர் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டு சில அரசியல் காரணங்களால் தடைபட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ்
வேளாங்கண்ணி
பதிலளிநீக்கு- tuffyshri@yahoo.com
வேளாங்கண்ணி Was able to solve quickly
பதிலளிநீக்குVelankanni
பதிலளிநீக்குவேளாங்கண்ணி - முத்துசுப்ரமண்யம்
பதிலளிநீக்கு1. வேலூர்
பதிலளிநீக்கு2. விளாத்திகுளம்
3. கருங்குழி
4. திருக்கழுக்குன்றம்
5. ஜெயங்கொண்டம்
6. செக்கானூரணி
வேளாங்கண்ணி. Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
திருமதி சாந்தி நாராயணன் 14.11.2015 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவேலூர்
விளாத்திகுளம்
கருங்குழி
திருக்கழுங்குன்றம்
ஜெயங்கொண்டான்
செக்கானூரணி
இறுதிவிடை: வேளாங்கண்ணி
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 14.11.2015 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவேளாங்கண்ணி
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 14.11.2015 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவேளாங்கண்ணி
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 14.11.2015 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவேளாங்கண்ணி