ஊர்ப்புதிர் - 45 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 45 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. தஞ்சாவூர்
2. பில்லனகுப்பம்
3. உடுமலைப்பேட்டை
4. ஏ.காளையம்புதூர்
5. இளவங்கர்குடி
6. பள்ளிக்கரணை
7. அரியனப்பள்ளி
8. கன்னியாகுமரி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு:
விடை: தமிழகத்தில் உண்டியல் இல்லாத கோயில்களில் ஒன்று இங்கு உள்ளது.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பிள்ளையார்பட்டி
பதிலளிநீக்குநாட்டில் கண்டெய்னர் புதிரே இன்னும் தெரியமாட்டேங்குது.... இதில ஊர் புதிரா....???
பதிலளிநீக்குபிள்ளையார்ட்பட்டிடி
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 4.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குPillaiyarpatti
திரு சுரேஷ் பாபு 4.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. தஞ்சாவூர் 5
2. பில்லனகுப்பம் 1
3. உடுமலைப்பேட்டை 7
4. ஏ.காளையம்புதூர் 3
5. இளவங்கர்குடி 8
6. பள்ளிக்கரணை 2
7. அரியனப்பள்ளி 6
8. கன்னியாகுமரி 4
விடை: பிள்ளையார்பட்டி
திருமதி சாந்தி நாராயணன் 7.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குபில்லனகுப்பம்
பள்ளிக்கரணை
ஏ.காளையம்புதூர்
கன்னியாகுமரி
தஞ்சாவூர்
அரியனப்பள்ளி
உடுமலைப்பேட்டை
இளவங்கர்குடி
இறுதி விடை:பிள்ளையார்பட்டி