ஜூன் 06, 2016

ஊர்ப்புதிர் - 37

                                                                                         

ஊர்ப்புதிர் - 37 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                             
ஊர்ப்புதிர் - 37 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     மேல்மாங்குப்பம்                                         
2.     குண்டலபள்ளி                                  
3.     நாகப்பட்டினம்                                  
4.     திருவள்ளூர்                                  
5.      ஒத்தக்கால் மண்டபம் 
6.      நெட்டெரி         

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:  விடை: தமிழ்நாட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று. 

ராமராவ்