ஜனவரி 26, 2016

ஊர்ப்புதிர் - 28

ஊர்ப்புதிர் - 28 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 28 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     பெரியமணலி                          
2.     அத்தியூர்                                 
3.     எதிர்கோட்டை                          
4.     ராமேஸ்வரம்                           
5.     காரைக்குடி                        
6.      ஆரணி        

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 27 க்கு விடை:   "  பென்னாகரம்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " பென்னாகரம்  ",  தமிழ்நாடு  தருமபுரி  மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .      
2.      ஒகனேக்கல் அருவி பென்னாகரத்திளிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது             
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 19, 2016

ஊர்ப்புதிர் - 27

ஊர்ப்புதிர் - 27 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 27 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அவினாசி                         
2.     மனப்பாரநல்லூர்                              
3.     பெண்ணாடம்                         
4.     ஆலங்குளம்                          
5.     கன்னிவாடி                      
6.       நாமக்கல்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  இது ஓர் தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.   

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 26 க்கு விடை:   "  சோழவந்தான்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " சோழவந்தான்  ",  தமிழ்நாடு  மதுரை  மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .      
2.      சோழவந்தான் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது.    
3.      சோழவந்தான் சோலைக்குறிச்சி என்றும் சனகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.   
4.   பாண்டிய நாட்டில்  இருந்த  இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்வதைக்கண்டு வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர். சோழமன்னன் இவ்வூரை "சின்ன தஞ்சை" என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.       
5.      வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு இவை பெருமளவில் விளைவிக்கப் படுகின்றன. 
6.    சனகை மாரியம்மன் கோவில், சனக நாராயண பெருமாள் கோவில், ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணஸ்வாமி கோவில், ஸ்ரீ பிரளயநாதஸ்வாமி கோவில் இங்கு பிரசித்தி பெற்றவை.            
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 12, 2016

ஊர்ப்புதிர் - 26

ஊர்ப்புதிர் - 26 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 26 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அரவக்குறிச்சி                        
2.     மணிமுத்தாறு                             
3.     சோலையூர்                        
4.     வலங்கைமான்                         
5.     கீழக்கரை                     
6.      தண்டந்தோட்டம்     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  இது ஓர் தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.   

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 25 க்கு விடை:   "  சங்கரன்கோவில்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " சங்கரன்கோவில்  ",  தமிழ்நாடு  திருநெல்வேலி  மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய  நகராட்சி.      
2.      சங்கரன்கோவில் முன்பு சங்கரநயினார்கோவில் என்று அழைக்கப்பட்டது.  108 சக்தி தளங்களில் ஒன்று.   
3.      இங்கு அமைந்துள்ள சங்கர நாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் மூலக்கடவுளின் உருவம் ஒருபாதி சிவனாகவும், மறுபாதி விஷ்ணுவாகவும் அமைந்துள்ளது  சிறப்பு. இக்கோவிலின் சங்கரேஸ்வர் வன்மீகநாதர் என்று அழைக்கப் படுகிறார்.  
4.    இவ்வூரில் நடக்கும் ஆடித்தபசுத் திருவிழா மிகச்சிறப்பானது. மற்ற திருவிழாக்களான சித்திரை பிரம்மோத்சவம், ஐப்பசி  திருக்கல்யாணம், தெப்பத் திருவிழா இவையும் சிறப்பானவை.     
5.  இங்கு அமைந்துள்ள பெரிய மலர் சந்தையிலிருந்து மலர்கள் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
6.      இங்கு நெசவாலைகள், நூற்பாலைகள், ஆடை தயாரிப்பாலைகள் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளன. 
7.      சங்கரன்கோவில் பிரியாணி  பெயர்  பெற்றது. 
8.   இவ்வூரின்  பிரபலங்கள்:  வை.கோ (அரசியல் தலைவர்), நடிகர் விவேக்,  நடிகர் S.J.சூர்யா,  எழுத்தாளர் தேவநேயப் பாவாணர்.           
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 04, 2016

ஊர்ப்புதிர் - 25

ஊர்ப்புதிர் - 25 ல், தமிழகத்தில் உள்ள எட்டு   (8) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 25 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     சிக்கல்                       
2.     திருவானைக்காவல்                            
3.     கந்தர்வ கோட்டை                        
4.     சமயபுரம்                        
5.     சேரன்மகாதேவி                     
6.      செங்கோட்டை 
7.       காட்டுமன்னார் கோவில் 
8.       ராசிபுரம்                   
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் அமைந்த இவ்வூரில் உள்ள சிவனாலயம் மிகப் பிரசித்தி பெற்றது.  

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 24 க்கு விடை:   "  கோவில்பட்டி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.      " கோவில்பட்டி  ",  தமிழ்நாடு  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.      
2.   கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், பட்டாசு தொழிற்சாலைகளுக்கும், நூற்பாலைகளுக்கும் மிகப் பிரசித்தி பெற்றது.   
3.   இங்கு மூக்கரை விநாயகர் கோவில், அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில், காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில், ராமர் பாதம், சொர்ணமலை கதிரேசன் கோயில் அமைந்துள்ளது. 
4.     வ.உ.சி வழக்கறிஞராக பணிபுரிந்த ஊர் இது.   
5.     இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் மிக்க சுவை பெற்றது.         
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ்