பிப்ரவரி 25, 2016

ஊர்ப்புதிர் - 32

ஊர்ப்புதிர் - 32 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 32 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     கொண்டாங்கி                              
2.     தனுஷ்கோடி                                     
3.     மாணிக்கானேரி                             
4.     கிள்ளியூர்                              
5.     நெற்குணம்                            
6.      எருமந்தாங்கல்  

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 31 க்கு விடை:   " கும்பகோணம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " கும்பகோணம் ",  தமிழ்நாடு  தஞ்சாவூர்  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.  இந்நகரம் முநாளில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டது. இந்நகரம் முழுதும் கோயில்கள் நிறைந்துள்ளமையால் இது கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 
3.       கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாமகத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 
4.  பஞ்சகுரோசத்தலங்களான திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கருப்பூர் இந்நகரைச் சுற்றி அமைந்துள்ளன. 
5.       கும்பகோணம் டிகிரி காபி, கும்பகோணம் வெற்றிலை மிகவும் பிரபலம். 
6.       9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தைச் சுற்றி அமைந்துள்ளன. 
7.       கணித மேதை ராமானுஜம் கும்பகோணத்தில் வாழ்ந்தவர்.       
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ் 

பிப்ரவரி 17, 2016

ஊர்ப்புதிர் - 31

ஊர்ப்புதிர் - 31 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.
 
ஊர்ப்புதிர் - 31 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     லெட்சுமணபட்டி                             
2.     திருக்கோவிலூர்                                    
3.     குழித்துறை                             
4.     பென்னாகரம்                             
5.     திப்பனம்பட்டி                           
6.      ஆம்பூர் 

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 30 க்கு விடை:   " உசிலம்பட்டி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " உசிலம்பட்டி ",  தமிழ்நாடு  மதுரை  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.      இப்பகுதியில் ஊசியிலை மரங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் ஊசியிலை, உசிலை ஆகி உசிலம்பட்டி ஆனது.       
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ் 

பிப்ரவரி 10, 2016

ஊர்ப்புதிர் - 30

ஊர்ப்புதிர் - 30 ல்,  தமிழகத்தில் உள்ள  ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 30 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     நத்தம்                            
2.     குறிஞ்சிப்பாடி                                   
3.     பையனப்பள்ளி                            
4.     முசிறி                             
5.     நடுவிக்கோட்டை                          
6.      உடன்குடி 
7.      பல்லடம்

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 29 க்கு விடை:   " மயிலாடுதுறை "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " மயிலாடுதுறை  ",  தமிழ்நாடு  நாகப்பட்டினம்  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.       இந்த ஊர் முன்பு மயூரம் என்றும் பிற்காலத்தில் மாயவரம் என்றும்  அழைக்கப்பட்டது.   
3.   சிவனிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஊரில் ஓடும் காவிரி ஆற்றின் தென்புறம் உமையவள் மயிலுருவில் தவம் செய்ததாகவும், தவத்தை மெச்சிய சிவன் ஆண்மயிலாக வந்து பெண்மயிலான பார்வதியுடன் நடனமாடியதாகவும் இந்த காரணத்தால் இந்த ஊர் மயிலாடிய காவிரித்துறை (மயிலாடுதுறை) என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 
4.    தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது. இந்த  ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள்  அனைத்தும் தலா ஒன்றரை  நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளன. 
5.   "ஆயிரம்  ஆனாலும் மாயுரம் ஆகாது" என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும். 
6.      நகரில்  மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்கள் பிரபலமானவை.  . 
7.    ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவான "கடைமுக தீர்த்தவாரி முழுக்கு" (கடை முழுக்கு) மிகவும் பிரபலமானதாகும்.  
8.     இந்நகரம் நவக்கிரக கோவில்களுக்கு செல்ல ஒரு வாயிலாக அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றி  இருக்கும் தரங்கம்பாடி, பாளையார், காரைக்கால், திருமுல்லைவாயல், பிச்சாவரம் சதுப்புக் காடுகள் ஆகியவை பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.        
--------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 
   

பிப்ரவரி 02, 2016

ஊர்ப்புதிர் - 29

ஊர்ப்புதிர் - 29 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 29 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     ஏற்காடு                           
2.     திருவெண்டுறை                                  
3.     நயினார்கோவில்                           
4.     தாழையூத்து                            
5.     மடத்துக்குளம்                         
6.      நல்லாம்பிள்ளை
         
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 28 க்கு விடை:   " அரக்கோணம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " அரக்கோணம்  ",  தமிழ்நாடு  வேலூர்  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.     இந்த நகரைச் சுற்றி முக்கிய இடங்களான காஞ்சிபுரம், தக்கோலம், திருப்பதி, திருவாலங்காடு, திருத்தணி, சோளிங்கர்  ஆகிய ஆறு இடங்கள், ஆறு பக்கங்களில், ஆறு கோணங்களில் அமைந்துள்ளதால், இந்த நகரம், ஆறு கோணம் என்றும் பின்னர் அது மருவி அரக்கோணம் என்றும் பெயர் அமைந்ததாக கூறப்படுகிறது. 
3.   தென்னக ரயில்வேயின் பெரிய பணிமனைகளில் ஒன்றான Engineering Workshop மற்றும் Electric Loco Shed இங்கு  அமைந்துள்ளன.
4.       இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உணவுக்கிடங்கு (FCI Godown) இங்கு அமைந்துள்ளது. 
5.   தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய  கடற்படை விமானங்களின் (INS ராஜாளி) ஓடுபாதை இங்குதான் அமைந்துள்ளது.
6.    மிகப்பிரபலமான தொழிற்சாலைகளான MRF (Madras Rubber Factory), Ultratech Cement, Ramco Industries, Best and Crompton Exports இவைகளும் இங்குதான் அமைந்துள்ளன. 
7.       150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த CSI Andrews உயர் பள்ளி இங்குதான் உள்ளது. 
8.    தமிழகத்திலேயே கோடை காலத்தில் அதிக வெப்பம் பதிவாகும் இடமாகவும், மழை காலத்தில் அதிக மழை பதிவாகும் இடமாகவும் அரக்கோணம் விளங்குகிறது.          
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ்