நவம்பர் 01, 2015

ஊர்ப்புதிர் - 20

ஊர்ப்புதிர் - 20 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 20  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     காரமடை                  
2.     கொல்லங்கோடு                        
3.     திருவாதவூர்                   
4.     ஒட்டப்பிடாரம்                   
5.     பார்த்திபனூர்                
6.      சண்முகநாதபுரம்                
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது தமிழ் நாட்டில் ஒரு சட்ட மன்றத் தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 19 க்கு விடை:   "  அறந்தாங்கி  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :


1.       "அறந்தாங்கி  ",  தமிழ்நாடு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  ஒரு நகராட்சி.     
2.      புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதான நதியான வெள்ளாறு இந்த நகரின் மேற்குப் பகுதியை கடந்து சென்று வங்கக்கடலை அடைகிறது.       
3.       பிரம்மாண்ட கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் இந்த ஊரின் தொன்மையை பறைசாற்றுவதை காணலாம். இந்த கோட்டையின் சுவர்கள் செங்கற்களாலோ அல்லது பாறைகளாலோ கட்டப்பட்டதல்ல. அதன் பெரிய இடைவெளிகள் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளதை காணலாம். கோட்டையை சுற்றி பிரம்மாண்டஅகழி உள்ளது. 
4.     பழமைவாய்ந்த சிவன் கோவில் ஒன்று இங்குள்ளது. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

7 கருத்துகள் :

  1. ஒரத்தநாடு - முத்துசுப்ரமண்யம்

    பதிலளிநீக்கு
  2. 1. ஒட்டப்பிடாரம்
    2. காரமடை
    3. பார்த்திபனூர்
    4. திருவாதவூர்
    5. சண்முகநாதபுரம்
    6. கொல்லங்கோடு

    ஒரத்தநாடு. Saringalaa sir?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    பதிலளிநீக்கு
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 1.11.2015 அன்று அனுப்பிய விடை:

    விடை : ஒரத்தநாடு

    பதிலளிநீக்கு
  4. திரு சுரேஷ் பாபு 1.11.2015 அன்று அனுப்பிய விடை:

    1. காரமடை 2
    2. கொல்லங்கோடு 6
    3. திருவாதவூர் 4
    4. ஒட்டப்பிடாரம் 1
    5. பார்த்திபனூர் 3
    6. சண்முகநாதபுரம் 5

    விடை: ஒரத்தநாடு.

    பதிலளிநீக்கு
  5. திருமதி சாந்தி நாராயணன் 1.11.2015 அன்று அனுப்பிய விடை:

    ஓட்டப்பிடாரம்
    காரமடை
    பார்த்திபனூர்
    திருவாதவூர்
    சண்முகனாதபுரம்
    கொல்லங்கோடு

    இறுதி விடை:ஒரத்தநாடு

    பதிலளிநீக்கு
  6. திரு சந்தானம் குன்னத்தூர் 3.11.2015 அன்று அனுப்பிய விடை:

    Is it oraththanaadu ?

    பதிலளிநீக்கு