ஊர்ப்புதிர் - 16 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 16 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. கல்லல்
2. பட்டுக்கோட்டை
3. திருச்செங்கோடு
4. சென்னிமலை
5. தென்கரை
6. பத்மநாபபுரம்
7. நாங்குநேரி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 15 க்கு விடை: " வலங்கைமான் "
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1. "வலங்கைமான் ", தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி .
2. இங்கு அமைந்திருக்கும் மகா மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
3. மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என பெயர் வந்ததாகக் கூறுவர். சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது அந்த மான் வலது புறமாக ஓடியதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாக சிலர் கூறுவர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ்
செங்கல்பட்டு For the first time I could logically fix the last two letters and then solve.
பதிலளிநீக்குசெங்கல்பட்டு.
பதிலளிநீக்குசெங்கல்பட்டு - முத்துசுப்ரமண்யம்
பதிலளிநீக்குதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 3.10.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குஊர்ப்புதிர் 16. விடை. செங்கல்பட்டு
திரு சந்தானம் குன்னத்தூர் 3.10.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவிடை. செங்கல்பட்டு