ஜனவரி 26, 2016

ஊர்ப்புதிர் - 28

ஊர்ப்புதிர் - 28 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 28 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     பெரியமணலி                          
2.     அத்தியூர்                                 
3.     எதிர்கோட்டை                          
4.     ராமேஸ்வரம்                           
5.     காரைக்குடி                        
6.      ஆரணி        

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 27 க்கு விடை:   "  பென்னாகரம்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " பென்னாகரம்  ",  தமிழ்நாடு  தருமபுரி  மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .      
2.      ஒகனேக்கல் அருவி பென்னாகரத்திளிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது             
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 19, 2016

ஊர்ப்புதிர் - 27

ஊர்ப்புதிர் - 27 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 27 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அவினாசி                         
2.     மனப்பாரநல்லூர்                              
3.     பெண்ணாடம்                         
4.     ஆலங்குளம்                          
5.     கன்னிவாடி                      
6.       நாமக்கல்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  இது ஓர் தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.   

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 26 க்கு விடை:   "  சோழவந்தான்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " சோழவந்தான்  ",  தமிழ்நாடு  மதுரை  மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .      
2.      சோழவந்தான் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது.    
3.      சோழவந்தான் சோலைக்குறிச்சி என்றும் சனகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.   
4.   பாண்டிய நாட்டில்  இருந்த  இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்வதைக்கண்டு வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர். சோழமன்னன் இவ்வூரை "சின்ன தஞ்சை" என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.       
5.      வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு இவை பெருமளவில் விளைவிக்கப் படுகின்றன. 
6.    சனகை மாரியம்மன் கோவில், சனக நாராயண பெருமாள் கோவில், ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணஸ்வாமி கோவில், ஸ்ரீ பிரளயநாதஸ்வாமி கோவில் இங்கு பிரசித்தி பெற்றவை.            
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 12, 2016

ஊர்ப்புதிர் - 26

ஊர்ப்புதிர் - 26 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 26 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அரவக்குறிச்சி                        
2.     மணிமுத்தாறு                             
3.     சோலையூர்                        
4.     வலங்கைமான்                         
5.     கீழக்கரை                     
6.      தண்டந்தோட்டம்     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  இது ஓர் தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.   

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 25 க்கு விடை:   "  சங்கரன்கோவில்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " சங்கரன்கோவில்  ",  தமிழ்நாடு  திருநெல்வேலி  மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய  நகராட்சி.      
2.      சங்கரன்கோவில் முன்பு சங்கரநயினார்கோவில் என்று அழைக்கப்பட்டது.  108 சக்தி தளங்களில் ஒன்று.   
3.      இங்கு அமைந்துள்ள சங்கர நாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் மூலக்கடவுளின் உருவம் ஒருபாதி சிவனாகவும், மறுபாதி விஷ்ணுவாகவும் அமைந்துள்ளது  சிறப்பு. இக்கோவிலின் சங்கரேஸ்வர் வன்மீகநாதர் என்று அழைக்கப் படுகிறார்.  
4.    இவ்வூரில் நடக்கும் ஆடித்தபசுத் திருவிழா மிகச்சிறப்பானது. மற்ற திருவிழாக்களான சித்திரை பிரம்மோத்சவம், ஐப்பசி  திருக்கல்யாணம், தெப்பத் திருவிழா இவையும் சிறப்பானவை.     
5.  இங்கு அமைந்துள்ள பெரிய மலர் சந்தையிலிருந்து மலர்கள் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
6.      இங்கு நெசவாலைகள், நூற்பாலைகள், ஆடை தயாரிப்பாலைகள் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளன. 
7.      சங்கரன்கோவில் பிரியாணி  பெயர்  பெற்றது. 
8.   இவ்வூரின்  பிரபலங்கள்:  வை.கோ (அரசியல் தலைவர்), நடிகர் விவேக்,  நடிகர் S.J.சூர்யா,  எழுத்தாளர் தேவநேயப் பாவாணர்.           
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 04, 2016

ஊர்ப்புதிர் - 25

ஊர்ப்புதிர் - 25 ல், தமிழகத்தில் உள்ள எட்டு   (8) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 25 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     சிக்கல்                       
2.     திருவானைக்காவல்                            
3.     கந்தர்வ கோட்டை                        
4.     சமயபுரம்                        
5.     சேரன்மகாதேவி                     
6.      செங்கோட்டை 
7.       காட்டுமன்னார் கோவில் 
8.       ராசிபுரம்                   
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் அமைந்த இவ்வூரில் உள்ள சிவனாலயம் மிகப் பிரசித்தி பெற்றது.  

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 24 க்கு விடை:   "  கோவில்பட்டி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.      " கோவில்பட்டி  ",  தமிழ்நாடு  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.      
2.   கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், பட்டாசு தொழிற்சாலைகளுக்கும், நூற்பாலைகளுக்கும் மிகப் பிரசித்தி பெற்றது.   
3.   இங்கு மூக்கரை விநாயகர் கோவில், அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில், காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில், ராமர் பாதம், சொர்ணமலை கதிரேசன் கோயில் அமைந்துள்ளது. 
4.     வ.உ.சி வழக்கறிஞராக பணிபுரிந்த ஊர் இது.   
5.     இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் மிக்க சுவை பெற்றது.         
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

டிசம்பர் 28, 2015

ஊர்ப்புதிர் - 24

ஊர்ப்புதிர் - 24 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 24 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     திருப்பரங்குன்றம்                      
2.     கல்லக்குடி                           
3.     கோபிசெட்டிப்பாளையம்                       
4.     சாயல்குடி                       
5.     தேவிபட்டணம்                    
6.      ஜோலார்பேட்டை                  
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 23 க்கு விடை:   "  பரமக்குடி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.      " பரமக்குடி ",  தமிழ்நாடு  ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.      
2.      இது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.  
3.  பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். மொத்த தமிழகத்திற்கான மிளகாய் விலை இங்குதான் நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  
4.    பரமக்குடியில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 
5.  இங்கு அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில், முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில், ஐந்து முனை முருகன் கோவில் பிரசித்தி பெற்றவை. சௌராஷ்டிரர்களால் கொண்டாடப்படும் காமன் பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.       
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 21, 2015

ஊர்ப்புதிர் - 23


ஊர்ப்புதிர் - 23 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 23 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     வாடிப்பட்டி                     
2.     கும்பக்கரை                           
3.     பேரளம்                      
4.     வெல்லங்குளி                      
5.     பர்கூர்                   
6.      வடமதுரை                  
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 22 க்கு விடை:   "  வேளாங்கண்ணி  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.    " வேளாங்கண்ணி  ",  தமிழ்நாடு  நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பேரூராட்சி .     
2.    நாகப்பட்டினத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் வேளாங்கண்ணி அமைந்துள்ளது. 
3.    காவிரி நதியின் ஒரு கிளை நதியான வெள்ளையாறு இந்நகரின் தென்புறமாக ஓடி கடலில் கலக்கிறது. 
4.    கத்தோலிக்க கிருத்தவர்களின் மிகப்பெரிய புனிதத் தலங்களில் ஒன்றாக வேளாங்கண்ணி கருதப்படுகிறது. 
5.  இங்கு அமைந்துள்ள மாதா கோவில் இரட்டை கோபுரங்கள் கொண்டது. தூய ஆரோக்கிய அன்னை பெயரில் கட்டப்பட்டதால், இது தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது.. 
6.  எல்லா சமயத்தினரும் இந்த கோவிலுக்கு வந்து அன்னை மரியாவுக்கு பிரார்த்தனைகள் செலுத்துகிறார்கள்.   நம்பிக்கையோடு இறைவேண்டல் செய்பவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதால் நன்றிக் காணிக்கைகளையும் அளிக்கிறார்கள்.     
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

நவம்பர் 14, 2015

ஊர்ப்புதிர் - 22

ஊர்ப்புதிர் - 22 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  
ஊர்ப்புதிர் - 22  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     ஜெயங்கொண்டம்                    
2.     கருங்குழி                          
3.     வேலூர்                     
4.     செக்கானூரணி                     
5.     விளாத்திகுளம்                  
6.      திருக்கழுக்குன்றம்                 
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு: இது ஒரு புண்ணியத்தலம். 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 21 க்கு விடை:   "  மதுரவாயல்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.       " மதுரவாயல் ",  தற்போது தமிழ்நாடு  சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி..     
2.        மதுரவாயல் 2009 க்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு நகராட்சியாய் இருந்தது.
3.    மதுரவாயல்  சென்னைத் துறைமுகத்திலிருந்து 8 வது  மைலில் இருப்பதால் மதுரவாயில்  "எட்டாவது மைல் " என்ற பெயரையும் கொண்டுள்ளது.
4.     மதுரவாயல் என்றால் அழகான வாயல் என்று பொருள். சென்னை மாநகரின் நுழைவாயல் என்பதால் இந்த பெயர் வந்ததாக கூறுவார்.
5.        மதுரவாயல் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 
6.      எண்ணூர் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டு சில அரசியல் காரணங்களால் தடைபட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது    
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ்