மார்ச் 28, 2015

ஊர்ப்புதிர் - 07


ஊர்ப்புதிர் - 07 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 07 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     மதகுப்பட்டி    
2.     ஆண்டிபட்டி        
3.     பெரியகுளம்       
4.     கோயம்புத்தூர்       
5.     சிங்கப்பெருமாள் கோயில்    
6.       செக்கானூரணி 
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 05 க்கு விடை:   "  வாணியம்பாடி   "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "வாணியம்பாடி ",  தமிழ்நாடு வேலூர்  மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி .
2.   இந்த நகரம் பாலாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.    
3.  தோல்  பதனிடும்  தொழிற்சாலைகளும்,  தோல் ஆடைகள் மற்றும்   தோல்    காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்  இங்கு நிறைய உள்ளன. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு, தோலாலான பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.   
4.   வாணியம்பாடி பிரியாணி மிகவும் பிரபலமான ஒன்று.  
5.  இங்கு அமைந்துள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலும், அதிதீஸ்வரர் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
6.   ஆசியா கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய தொலைநோக்கு கருவி  இங்கு பக்கத்தில் உள்ள காவலூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.     
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   

மார்ச் 19, 2015

ஊர்ப்புதிர் - 06

 
ஊர்ப்புதிர் - 06 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 06 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     மேட்டுப்பாளையம்   
2.     சமயநல்லூர்       
3.     குன்னக்குடி      
4.     வால்பாறை       
5.     ராணிப்பேட்டை   
6.       உசிலம்பட்டி
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 05 க்கு விடை:   "  கன்னியாகுமரி   "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "கன்னியாகுமரி ",  தமிழ்நாடு கன்னியாகுமரி  மாவட்டத்தின்  தலைநகராக அமைந்துள்ள ஒரு பேரூராட்சி .
2.   இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூணும்  இணைகின்றன.   
3.   இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும்.  
4.  இங்குள்ள கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில், விவேகானந்தர் நினைவு மண்டபம், மற்றும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகும்.  காந்தியடிகளுடைய மற்றும் காமராஜர் நினைவு மண்டபங்களும் இங்குள்ளன. 
5.  சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன்  நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும்  இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
6.   இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இந்த கடற்கரையில் கூடுகின்றனர். 
7.   இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டது. 
8.   மகாத்மா காந்தியின் அஸ்தி இங்குதான் கரைக்கப்பட்டது.      
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   

பிப்ரவரி 03, 2015

ஊர்ப்புதிர் - 05


ஊர்ப்புதிர் - 05 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 05 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     பவானி  
2.     புளியங்குடி      
3.     கப்பலூர்     
4.     சிங்கம்புணரி      
5.     பிள்ளையார்பட்டி  
6.      திருவண்ணாமலை
7.     தென்காசி        
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 04 க்கு விடை:   "  விருதுநகர்   "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "விருதுநகர் ",  தமிழ்நாடு விருதுநகர்  மாவட்டத்தின்  தலைநகர். மதுரையிலிருந்து  சுமார்  50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி.
2.   இந்த நகரின்  பழைய பெயர் " விருதுப்பட்டி ".  
3.  இங்குள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில்  பங்குனி  மாதம் நடைபெறும் "அக்னி சட்டி திருவிழா " மிகப் பிரசித்தி வாய்ந்தது.   
4.  "வியாபார நகரம் "என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன. பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது. 
5.   "விருதுநகர் புரோட்டா " மிகச் சிறப்பு பெற்றது. 
6.   பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர்.     
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்  

ஜனவரி 26, 2015

ஊர்ப்புதிர் - 04

ஊர்ப்புதிர் - 04 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஊர்ப்புதிர் - 04 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     கருங்குழி 
2.     தூத்துக்குடி     
3.     விக்கிரவாண்டி    
4.     சூலமங்கலம்     
5.     பெரம்பலூர் 
6.      கடையநல்லூர்      
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 03 க்கு விடை:   " கொடைக்கானல்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "கொடைக்கானல் ",  தமிழ்நாடு திண்டுக்கல்  மாவட்டத்தில் மதுரையிலிருந்து  சுமார்  130 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி.
2.   கோடை வாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. 
3.  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள்  இங்கே  பரவலாக  வளர்கின்றன. கடைசியாக  இந்த  மலர்கள்  2006 ம் ஆண்டு பூத்தன. .
4.  தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தினருகே சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
5.   சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
      1.  பிரையண்ட் பார்க் 
      2.  குணா குகைகள் 
      3.  கோக்கர்ஸ் வாக் 
      4.  தொப்பித் தூக்கி பாறைகள் 
      5.  பியர் சோளா நீர்வீழ்ச்சி 
      6.  கொடைக்கானல் ஏரி 
      7.  அமைதிப் பள்ளத்தாக்கு 
      8.  தூண் பாறைகள்
      9.  வெள்ளி நீர்வீழ்ச்சி 
    10.  செண்பகனூர் அருங்காட்சியகம்    
        
-----------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்  

ஜனவரி 19, 2015

ஊர்ப்புதிர் - 03


ஊர்ப்புதிர் - 03ல் , தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 03 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     நிலக்கோட்டை   
2.     திண்டிவனம்   
3.     கொடுமுடி   
4.     நாகர்கோவில்   
5.     உடையார்பாளையம்   
6.     அலங்காநல்லூர்      
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
குறிப்பு: விடைக்கான ஊர் 'திண்டுக்கல்' மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
---------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 01க்கு  விடை:   " குடியாத்தம் "
-------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "குடியாத்தம்",  தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் வேலூரிலிருந்து சுமார்  30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி.
2. ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய இந்திய தேசிய கொடி குடியாத்தம் நகரில் நெய்யப்பட்டது.
3. காமராஜர் முதன் முதலாக 1954ல் தமிழ் நாட்டின் முதல்  மந்திரியான போது இந்த குடியாத்தம் சட்டசபை தொகுதியிலிருந்து தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இங்குள்ள கங்கை அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் 1 ந்தேதியன்று நடைபெறும்  "கங்கை அம்மன் திருவிழா "மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.
-----------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 02 க்கு  விடை:   " திருத்தங்கல்  "
----------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "திருத்தங்கல்", தமிழ்நாடு விருதுநகர்  மாவட்டத்தில் விருதுநகரி லிருந்து சுமார்  20 கி.மீ. தூரத்தில், சிவகாசியிலிருந்து  2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி. திருத்தங்கல் முன்பு சிவகாசியுடன்  இணைந்திருந்தது.
2. இங்குள்ள "நின்ற நாராயணப் பெருமாள் கோயில்" இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் 108 திவ்ய தேசங்களுள் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
3. சிவகாசியைப் போலவே, திருத்தங்கல் பட்டாசு, தீப்பெட்டி, பிரிண்டிங் தொழிற் சாலைகளுக்கும், கல் குவாரிகளுக்கும் பெயர் பெற்றது.   . 
 
ராமராவ்  

 

ஜனவரி 11, 2015

ஊர்ப்புதிர் - 02


ஊர்ப்புதிர் - 02ல் , தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
 
ஊர்ப்புதிர் - 02 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     மார்த்தாண்டம்  
2.     தியாகதுர்கம்  
3.     திண்டுக்கல்  
4.     ராமநாதபுரம்  
5.     பூவிருந்தவல்லி  
6.     அருப்புக்கோட்டை  
7.     அறந்தாங்கி    
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
குறிப்பு: விடைக்கான ஊர் 'விருதுநகர்' மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
ராமராவ்  

ஜனவரி 01, 2015

ஊர்ப்புதிர் - 01


ஊர்ப்புதிரில், தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் (6 அல்லது அதற்கு மேற்பட்டவை), ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும்.
 
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து, மேலும் அப்படியே எழுத்துக்களை சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் கிடைக்கும்.
 
ஊர்ப்புதிர் - 01 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     பரமத்தி 
2.     அரக்கோணம் 
3.     குறிஞ்சிப்பாடி
4.     மணியாச்சி 
5.     போடிநாயக்கனூர் 
6.     மதுராந்தகம் 
 
ஊர்ப்புதிரில், விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும். 
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
ராமராவ்