பிப்ரவரி 10, 2016

ஊர்ப்புதிர் - 30

ஊர்ப்புதிர் - 30 ல்,  தமிழகத்தில் உள்ள  ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 30 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     நத்தம்                            
2.     குறிஞ்சிப்பாடி                                   
3.     பையனப்பள்ளி                            
4.     முசிறி                             
5.     நடுவிக்கோட்டை                          
6.      உடன்குடி 
7.      பல்லடம்

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 29 க்கு விடை:   " மயிலாடுதுறை "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " மயிலாடுதுறை  ",  தமிழ்நாடு  நாகப்பட்டினம்  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.       இந்த ஊர் முன்பு மயூரம் என்றும் பிற்காலத்தில் மாயவரம் என்றும்  அழைக்கப்பட்டது.   
3.   சிவனிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஊரில் ஓடும் காவிரி ஆற்றின் தென்புறம் உமையவள் மயிலுருவில் தவம் செய்ததாகவும், தவத்தை மெச்சிய சிவன் ஆண்மயிலாக வந்து பெண்மயிலான பார்வதியுடன் நடனமாடியதாகவும் இந்த காரணத்தால் இந்த ஊர் மயிலாடிய காவிரித்துறை (மயிலாடுதுறை) என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 
4.    தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது. இந்த  ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள்  அனைத்தும் தலா ஒன்றரை  நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளன. 
5.   "ஆயிரம்  ஆனாலும் மாயுரம் ஆகாது" என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும். 
6.      நகரில்  மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்கள் பிரபலமானவை.  . 
7.    ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவான "கடைமுக தீர்த்தவாரி முழுக்கு" (கடை முழுக்கு) மிகவும் பிரபலமானதாகும்.  
8.     இந்நகரம் நவக்கிரக கோவில்களுக்கு செல்ல ஒரு வாயிலாக அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றி  இருக்கும் தரங்கம்பாடி, பாளையார், காரைக்கால், திருமுல்லைவாயல், பிச்சாவரம் சதுப்புக் காடுகள் ஆகியவை பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.        
--------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 
   

பிப்ரவரி 02, 2016

ஊர்ப்புதிர் - 29

ஊர்ப்புதிர் - 29 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 29 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     ஏற்காடு                           
2.     திருவெண்டுறை                                  
3.     நயினார்கோவில்                           
4.     தாழையூத்து                            
5.     மடத்துக்குளம்                         
6.      நல்லாம்பிள்ளை
         
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 28 க்கு விடை:   " அரக்கோணம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " அரக்கோணம்  ",  தமிழ்நாடு  வேலூர்  மாவட்டத்தின் ஒரு நகராட்சி.       
2.     இந்த நகரைச் சுற்றி முக்கிய இடங்களான காஞ்சிபுரம், தக்கோலம், திருப்பதி, திருவாலங்காடு, திருத்தணி, சோளிங்கர்  ஆகிய ஆறு இடங்கள், ஆறு பக்கங்களில், ஆறு கோணங்களில் அமைந்துள்ளதால், இந்த நகரம், ஆறு கோணம் என்றும் பின்னர் அது மருவி அரக்கோணம் என்றும் பெயர் அமைந்ததாக கூறப்படுகிறது. 
3.   தென்னக ரயில்வேயின் பெரிய பணிமனைகளில் ஒன்றான Engineering Workshop மற்றும் Electric Loco Shed இங்கு  அமைந்துள்ளன.
4.       இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உணவுக்கிடங்கு (FCI Godown) இங்கு அமைந்துள்ளது. 
5.   தெற்கு ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய  கடற்படை விமானங்களின் (INS ராஜாளி) ஓடுபாதை இங்குதான் அமைந்துள்ளது.
6.    மிகப்பிரபலமான தொழிற்சாலைகளான MRF (Madras Rubber Factory), Ultratech Cement, Ramco Industries, Best and Crompton Exports இவைகளும் இங்குதான் அமைந்துள்ளன. 
7.       150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த CSI Andrews உயர் பள்ளி இங்குதான் உள்ளது. 
8.    தமிழகத்திலேயே கோடை காலத்தில் அதிக வெப்பம் பதிவாகும் இடமாகவும், மழை காலத்தில் அதிக மழை பதிவாகும் இடமாகவும் அரக்கோணம் விளங்குகிறது.          
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 26, 2016

ஊர்ப்புதிர் - 28

ஊர்ப்புதிர் - 28 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 28 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     பெரியமணலி                          
2.     அத்தியூர்                                 
3.     எதிர்கோட்டை                          
4.     ராமேஸ்வரம்                           
5.     காரைக்குடி                        
6.      ஆரணி        

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 27 க்கு விடை:   "  பென்னாகரம்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " பென்னாகரம்  ",  தமிழ்நாடு  தருமபுரி  மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .      
2.      ஒகனேக்கல் அருவி பென்னாகரத்திளிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது             
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 19, 2016

ஊர்ப்புதிர் - 27

ஊர்ப்புதிர் - 27 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 27 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அவினாசி                         
2.     மனப்பாரநல்லூர்                              
3.     பெண்ணாடம்                         
4.     ஆலங்குளம்                          
5.     கன்னிவாடி                      
6.       நாமக்கல்      

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  இது ஓர் தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.   

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 26 க்கு விடை:   "  சோழவந்தான்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " சோழவந்தான்  ",  தமிழ்நாடு  மதுரை  மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி .      
2.      சோழவந்தான் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது.    
3.      சோழவந்தான் சோலைக்குறிச்சி என்றும் சனகபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.   
4.   பாண்டிய நாட்டில்  இருந்த  இவ்வூரை சோழமன்னன் ஒருமுறை கண்டதாகவும் தனது ஆளுகைக்குட்பட்ட தஞ்சை நகர் போன்றே செழிப்பான வயல்வெளிகளுடன் திகழ்வதைக்கண்டு வியந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சோழன் உவந்தான் என்று பெயர் பெற்று அது நாளடைவில் மருவி சோழவந்தான் என்று ஆயிற்று என்பர். சோழமன்னன் இவ்வூரை "சின்ன தஞ்சை" என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.       
5.      வெற்றிலை, நெல், வாழை, தென்னை, கரும்பு இவை பெருமளவில் விளைவிக்கப் படுகின்றன. 
6.    சனகை மாரியம்மன் கோவில், சனக நாராயண பெருமாள் கோவில், ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணஸ்வாமி கோவில், ஸ்ரீ பிரளயநாதஸ்வாமி கோவில் இங்கு பிரசித்தி பெற்றவை.            
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 12, 2016

ஊர்ப்புதிர் - 26

ஊர்ப்புதிர் - 26 ல்,  தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் 
[ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
ஊர்ப்புதிர் - 26 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     அரவக்குறிச்சி                        
2.     மணிமுத்தாறு                             
3.     சோலையூர்                        
4.     வலங்கைமான்                         
5.     கீழக்கரை                     
6.      தண்டந்தோட்டம்     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  இது ஓர் தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.   

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 25 க்கு விடை:   "  சங்கரன்கோவில்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.     " சங்கரன்கோவில்  ",  தமிழ்நாடு  திருநெல்வேலி  மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய  நகராட்சி.      
2.      சங்கரன்கோவில் முன்பு சங்கரநயினார்கோவில் என்று அழைக்கப்பட்டது.  108 சக்தி தளங்களில் ஒன்று.   
3.      இங்கு அமைந்துள்ள சங்கர நாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் மூலக்கடவுளின் உருவம் ஒருபாதி சிவனாகவும், மறுபாதி விஷ்ணுவாகவும் அமைந்துள்ளது  சிறப்பு. இக்கோவிலின் சங்கரேஸ்வர் வன்மீகநாதர் என்று அழைக்கப் படுகிறார்.  
4.    இவ்வூரில் நடக்கும் ஆடித்தபசுத் திருவிழா மிகச்சிறப்பானது. மற்ற திருவிழாக்களான சித்திரை பிரம்மோத்சவம், ஐப்பசி  திருக்கல்யாணம், தெப்பத் திருவிழா இவையும் சிறப்பானவை.     
5.  இங்கு அமைந்துள்ள பெரிய மலர் சந்தையிலிருந்து மலர்கள் தமிழ் நாட்டின் பிற பகுதிகளுக்கும், கேரளாவிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
6.      இங்கு நெசவாலைகள், நூற்பாலைகள், ஆடை தயாரிப்பாலைகள் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளன. 
7.      சங்கரன்கோவில் பிரியாணி  பெயர்  பெற்றது. 
8.   இவ்வூரின்  பிரபலங்கள்:  வை.கோ (அரசியல் தலைவர்), நடிகர் விவேக்,  நடிகர் S.J.சூர்யா,  எழுத்தாளர் தேவநேயப் பாவாணர்.           
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

ஜனவரி 04, 2016

ஊர்ப்புதிர் - 25

ஊர்ப்புதிர் - 25 ல், தமிழகத்தில் உள்ள எட்டு   (8) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில்  கொடுக்கப்பட்டுள்ளன.  

இவற்றை  வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 

ஊர்ப்புதிர் - 25 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     சிக்கல்                       
2.     திருவானைக்காவல்                            
3.     கந்தர்வ கோட்டை                        
4.     சமயபுரம்                        
5.     சேரன்மகாதேவி                     
6.      செங்கோட்டை 
7.       காட்டுமன்னார் கோவில் 
8.       ராசிபுரம்                   
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  தமிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றில் அமைந்த இவ்வூரில் உள்ள சிவனாலயம் மிகப் பிரசித்தி பெற்றது.  

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 24 க்கு விடை:   "  கோவில்பட்டி "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1.      " கோவில்பட்டி  ",  தமிழ்நாடு  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி.      
2.   கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், பட்டாசு தொழிற்சாலைகளுக்கும், நூற்பாலைகளுக்கும் மிகப் பிரசித்தி பெற்றது.   
3.   இங்கு மூக்கரை விநாயகர் கோவில், அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில், காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில், ராமர் பாதம், சொர்ணமலை கதிரேசன் கோயில் அமைந்துள்ளது. 
4.     வ.உ.சி வழக்கறிஞராக பணிபுரிந்த ஊர் இது.   
5.     இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் மிக்க சுவை பெற்றது.         
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ்