ஏப்ரல் 02, 2017

ஊர்ப்புதிர் - 74


ஊர்ப்புதிர் - 74 ல், தமிழகத்தில் உள்ள  ஏழு   (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே  படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு   (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 74 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    வண்டுவாஞ்சேரி                    
2.    ஆதமங்கலன்                                                                    
3.    கோயம்புத்தூர்                                                                      
4.     மானாமதுரை                                    
5.     ஐயப்பன்தாங்கல்          
6.    காங்கேயம்   
7.    கொடைக்கானல்                        
    
 'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. 

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 3.4.2017 அன்று அனுப்பிய விடை:

    Kaanadukaaththan

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 3.4.2017 அன்று அனுப்பிய விடை:

    " கானாடுகாத்தான் "

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ் பாபு 10.4.2017 அன்று அனுப்பிய விடை:

    6-4-1-7-3-5-2

    கானாடுகாத்தான்.

    பதிலளிநீக்கு
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 10.4.2017 அன்று அனுப்பிய விடை:

    கானாடுகாத்தான்.

    பதிலளிநீக்கு