ஆகஸ்ட் 01, 2016

ஊர்ப்புதிர் - 40


ஊர்ப்புதிர் - 40 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.   
                        
ஊர்ப்புதிர் - 40 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     சேர்வைகாரன்பாளையம்                                            
2.     சத்திரப்பட்டி                                    
3.     திருப்புவனம்                                    
4.     நாமக்கல்                                     
5.      மரக்காணம்    
6.      அரியலூர்  
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை: ஒரு பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ள ஊர்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

4 கருத்துகள் :