அக்டோபர் 17, 2015

ஊர்ப்புதிர் - 18

ஊர்ப்புதிர் - 18 ல்தமிழகத்தில் உள்ள  ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 18  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     புதுக்கோட்டகம்                
2.     வேடந்தாங்கல்                      
3.     சீர்காழி                  
4.     திருப்புவனம்                 
5.     கிணத்துக்கடவு              
6.       மானாமதுரை   
7.       வேளாங்கண்ணி               
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 17 க்கு விடை:   "  எட்டயபுரம் "
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.   "எட்டயபுரம் ",  தமிழ்நாடு  தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி.   
2.  எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே  குறிப்பிடுகின்றனர்.     
3.     மகாகவி பாரதியார் இங்கு பிறந்தவர். மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார். 
4.     இவ்வூர் மக்களின் முக்கிய தொழில்கள்:  நெசவுத் தொழில், தீப்பெட்டி தொழில், வேளாண்மை. 
5.   இவ்வூரில் காணத்தக்க இடங்கள்:   பாரதியார் மணி மண்டபம், பாரதியார் பிறந்த வீடு, முத்துசாமி தீட்சிதர் நினைவகம், உமறுப் புலவர் தர்கா, எட்டப்பன் அரண்மனை, மாவீரன் அழகு முத்துக்கோன் அரண்மனை 
6.   அருகாமையிலுள்ள பார்க்கக்கூடிய இடங்கள்:   வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன் நினைவிடம் - கயத்தாறு, எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம், அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் - எப்போதும் வென்றான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

9 கருத்துகள் :

  1. Maarthaandam.

    After a long time I found an answer in oorpudhir.

    - Madhav

    பதிலளிநீக்கு
  2. Living in Thirunelveli I have been blissfully unaware of these facts about ettaiyapuram

    Thank you Mr Ramarao

    பதிலளிநீக்கு
  3. மார்த்தாண்டம் - முத்து

    பதிலளிநீக்கு
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 23.10.15 அன்று அனுப்பிய விடை:

    கேரள எல்லை என்ற குறிப்பு உதவியாய் இருந்தது

    மார்த்தாண்டம்

    பதிலளிநீக்கு
  5. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 23.10.15 அன்று அனுப்பிய விடை:

    he puzzle is quite tough. Based on your clue, I think the solution is "மார்த்தாண்டம்".

    பதிலளிநீக்கு
  6. திருமதி சாந்தி நாராயணன் 23.10.15 அன்று அனுப்பிய விடை:

    மானாமதுரை
    சீர்காழி
    கிணத்துக்கடவு
    வேடந்தாங்கல்
    வேளாங்கண்ணி
    புதுக்கோட்டகம்
    திருப்புவனம்

    இறுதி விடை:மார்த்தாண்டம்

    பதிலளிநீக்கு