செப்டம்பர் 25, 2015

ஊர்ப்புதிர் - 15

ஊர்ப்புதிர் - 15 ல்தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.  

ஊர்ப்புதிர் - 15  க்கான ஊர்களின் பெயர்கள்:

1.     கண்டரமாணிக்கம்            
2.     கருங்கல்                   
3.     சோழவந்தான்               
4.     வத்தலகுண்டு              
5.     சிறுநகை          
6.       பாலக்கோடு         
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 14 க்கு விடை:   "  வேதாரண்யம்  "
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :

1.      "வேதாரண்யம் ",  தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி .
2.      வேதாரண்யம் என்பது வடமொழிப்படுத்தப்பட்ட ஊர் பெயர். இதன் தமிழ் பெயர் மறைக்காடு என்பதாகும்.        
3.    இங்கு அமைந்துள்ள மறைக்காட்டு நாதர் கோயில் (வேதாரண்யேஸ்வரர் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 
4.     வேதாரண்யம் விளக்கழகு என்ற முதுமொழி மூலம் இவ்வூரின் பெருமையை உணரலாம்.
5. இங்கு அமைந்திருக்கும் உப்பு சத்தியாக்கிரக ஸ்தூபி 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தை  நினைவூட்டும் நினைவுச் சின்னமாகும்.  
6.    வேதாரண்யத்திற்கு பக்கத்தில் அமைந்திருக்கும் கோடியக்கரை பறவைகள் சரணாலயம், கலங்கரை விளக்கம், ராமர் பாதம், எட்டுக்குடி முருகன் கோயில்  ஆகியவை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும்.  

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமராவ் 

3 கருத்துகள் :

  1. திரு சந்தானம் குன்னத்தூர் 26.9.15அன்று அனுப்பிய விடை:

    The answer is VALANGGAIMAAN.

    பதிலளிநீக்கு
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 26.9.15 அன்று அனுப்பிய விடை

    ஊர புதிர் விடை. வலங்கைமான்

    பதிலளிநீக்கு