மே 02, 2015

ஊர்ப்புதிர் - 09


ஊர்ப்புதிர் - 09 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும். 
 
ஊர்ப்புதிர் - 09 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     கொடைக்கானல்      
2.     தொட்டியம்          
3.     வாசுதேவநல்லூர்         
4.     திருவையாறு        
5.     காஞ்சிபுரம்      
6.       பண்ருட்டி   
     
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 08 க்கு விடை:   "  நாகர்கோவில்  "
-------------------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1.   "சிதம்பரம் ",  தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான ஒரு மாநகராட்சி .
2.   இந்த நகரம் நாஞ்சில் நாடு என்றும் அழைக்கப்படுகிறது.     
3.  ஸ்ரீநாகராஜாவுக்கு திருக்கோவில்  இங்கு அமைந்துள்ளதால் இந்த நகரம் நாகர்கோவில் என்று அழைக்கப் படுகிறது.     
4.   மீன்பிடிவலை தயாரிப்பதில் இந்த நகரம் மிகவும் பிரசித்தி பெற்றது.   
5.  ISRO Propulsion Complex (Liquid Propulsion Systems Centre) இங்கு அமைந்துள்ளது. Indian Rare Earths Limited (IREL) தொழிற்சாலையும் இங்கு அமைந்துள்ளது. 
6.   கன்னியாகுமரி இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.  சுசீந்திரம் தாணுமாலயன் கோவில், மண்டைக்காடு ஸ்ரீபகவதியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
7.   இங்கு அமைந்துள்ள St.Xavier Church, CSI Home Church மிகவும் பழமையானவையும், புகழ் பெற்றவையும் ஆகும். 
8.   இந்த நகரத்தை ஒட்டிய சுற்றுலாத் தலங்கள்:  முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப் பாலம், பொய்கை அணை, உலக்கை அருவி. 
9.   கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை யும் இந்த ஊரை சேர்ந்தவர்கள்.          
        
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
   . 
ராமராவ்   

7 கருத்துகள் :

  1. பெயரில்லா7 மே, 2015 அன்று PM 6:07

    திண்டிவனம் - முத்து

    பதிலளிநீக்கு
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 2.5.15 அன்று அனுப்பிய விடை:

    " திண்டிவனம் "

    பதிலளிநீக்கு
  3. திருமதி சாந்தி நாராயணன் 5.5.15 அன்று அனுப்பிய விடை:

    திருவையாறு
    பண்ருட்டி
    தொட்டியம்
    வாசுதேவனல்லூர்
    கொடைக்கானல்
    காஞ்சிபுரம்

    இறுதி விடை :திண்டிவனம்

    பதிலளிநீக்கு
  4. திரு சந்தானம் குன்னத்தூர் 7.5.15 அன்று அனுப்பிய விடை:

    The answer isThiNdivanam

    பதிலளிநீக்கு
  5. திருமதி நாகமணி ஆனந்தம் 9.5.15 அன்று அனுப்பிய விடை:

    "Thintivanam "

    பதிலளிநீக்கு