ஜனவரி 19, 2015

ஊர்ப்புதிர் - 03


ஊர்ப்புதிர் - 03ல் , தமிழகத்தில் உள்ள ஆறு  (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 03 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     நிலக்கோட்டை   
2.     திண்டிவனம்   
3.     கொடுமுடி   
4.     நாகர்கோவில்   
5.     உடையார்பாளையம்   
6.     அலங்காநல்லூர்      
 
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
 
குறிப்பு: விடைக்கான ஊர் 'திண்டுக்கல்' மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
---------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 01க்கு  விடை:   " குடியாத்தம் "
-------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "குடியாத்தம்",  தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் வேலூரிலிருந்து சுமார்  30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி.
2. ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய இந்திய தேசிய கொடி குடியாத்தம் நகரில் நெய்யப்பட்டது.
3. காமராஜர் முதன் முதலாக 1954ல் தமிழ் நாட்டின் முதல்  மந்திரியான போது இந்த குடியாத்தம் சட்டசபை தொகுதியிலிருந்து தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. இங்குள்ள கங்கை அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் 1 ந்தேதியன்று நடைபெறும்  "கங்கை அம்மன் திருவிழா "மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று.
-----------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 02 க்கு  விடை:   " திருத்தங்கல்  "
----------------------------------------------------- 
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
 
1. "திருத்தங்கல்", தமிழ்நாடு விருதுநகர்  மாவட்டத்தில் விருதுநகரி லிருந்து சுமார்  20 கி.மீ. தூரத்தில், சிவகாசியிலிருந்து  2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி. திருத்தங்கல் முன்பு சிவகாசியுடன்  இணைந்திருந்தது.
2. இங்குள்ள "நின்ற நாராயணப் பெருமாள் கோயில்" இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் 108 திவ்ய தேசங்களுள் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
3. சிவகாசியைப் போலவே, திருத்தங்கல் பட்டாசு, தீப்பெட்டி, பிரிண்டிங் தொழிற் சாலைகளுக்கும், கல் குவாரிகளுக்கும் பெயர் பெற்றது.   . 
 
ராமராவ்  

 

8 கருத்துகள் :

  1. கொடைக்கானல் Interesting but found it easier to solve than the first two.

    பதிலளிநீக்கு
  2. கொடைக்கானல்

    பவளமணி பிரகாசம்

    பதிலளிநீக்கு
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 19.01.15 அன்று அனுப்பிய விடை:

    " கொடைக்கானல் "

    பதிலளிநீக்கு
  4. திரு சந்தானம் குன்னத்தூர் 19.01.15 அன்று அனுப்பிய விடை:

    The order should be 1.kodumudi 2.udaiyaarpalayam 3.nilakkottai, 4.alangaanallur 5.thindivanam 6. naagarkovil.

    The final answer is KODAIKKAANAL.

    பதிலளிநீக்கு
  5. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் 19.01.15 அன்று அனுப்பிய விடையும், கருத்தும் :

    1. கொடுமுடி
    2. உடையார்பாளையம்
    3. நிலக்கோட்டை
    4. அலங்காநல்லூர்
    5. திண்டிவனம்
    6. நாகர்கோவில்

    கொடைக்கானல்.

    A great attempt in bringing the visibility to the important cities/towns/places.
    " கொடைக்கானல் "

    பதிலளிநீக்கு
  6. திரு சாந்தி நாராயணன் 20.01.15 அன்று அனுப்பிய விடை:

    கொடுமுடி
    உடையார்பாளையம்
    நிலக்கோட்டை
    அலங்காநல்லூர்
    திண்டிவனம்
    நாகர்கோவில்

    இறுதி விடை: கொடைக்கானல்

    பதிலளிநீக்கு
  7. திருமதி நாகமணி ஆனந்தம் 20.01.15 அன்று அனுப்பிய விடை

    Kodaikkanal


    பதிலளிநீக்கு