ஜனவரி 01, 2015

ஊர்ப்புதிர் - 01


ஊர்ப்புதிரில், தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் (6 அல்லது அதற்கு மேற்பட்டவை), ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும்.
 
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து, மேலும் அப்படியே எழுத்துக்களை சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் கிடைக்கும்.
 
ஊர்ப்புதிர் - 01 க்கான ஊர்களின் பெயர்கள்:
 
1.     பரமத்தி 
2.     அரக்கோணம் 
3.     குறிஞ்சிப்பாடி
4.     மணியாச்சி 
5.     போடிநாயக்கனூர் 
6.     மதுராந்தகம் 
 
ஊர்ப்புதிரில், விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும். 
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
ராமராவ்  
           
 

8 கருத்துகள் :

  1. குடியாத்தம்

    பவளமணி பிரகாசம்

    பதிலளிநீக்கு
  2. குடியாத்தம் ; 1.குறிஞ்சிப்பாடி, 2.போடிநாயக்கனூர். 3 மணியாச்சி 4.பரமத்தி 5.மதுராந்தகம். 6.அரக்கோணம்.

    பதிலளிநீக்கு
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 1.1.15 அன்று அனுப்பிய விடை:

    " குடியாத்தம் "

    பதிலளிநீக்கு
  4. திரு K.R.சந்தானம் 1.1.15 அன்று அனுப்பிய விடை:

    " the order should be 3,5,4,1,6,2 to give GUDIYAATHTHAM in the end. Very interesting "

    பதிலளிநீக்கு
  5. திருமதி சாந்தி நாராயணன் 1.1.15 அன்று அனுப்பிய விடை:

    குறிஞ் சிப்பாடி
    போடிநாயக்கனூர்
    மணியாச்சி
    பரமத்தி
    மதுராந்தகம்
    அரக்கோணம்

    இறுதி விடை : குடியாத்தம்

    பதிலளிநீக்கு